News April 15, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ குறள் எண்: 2
▶குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
▶பொருள்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கல்வி கற்றிருந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை.
Similar News
News December 4, 2025
சரித்திரம் படைத்த மிட்செல் ஸ்டார்க்!

டெஸ்ட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸி.,யின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். அவர் 102 டெஸ்ட் போட்டிகளில் 415 விக்கெட்களை சாய்த்துள்ளார். முன்னதாக, பாக்., ஜாம்பவான் வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் 16-வது இடத்தில் உள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், EPS முன்னிலையில், திருவாரூர் நகர திமுக பிரமுகர் சின்னவன் பிரகாஷ் அதிமுகவில் இணைந்தார். அதேபோல், திண்டுக்கல் மதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அனீஸ் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், திண்டுக்கல் சீனிவாசன் முன்பு தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
News December 4, 2025
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா

திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவாமிநாதன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுவாமிநாதன் மீது HC தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


