News August 10, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.

Similar News

News January 28, 2026

கூட்டணி முடிவு.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ், ராமதாஸ் தரப்பு பாமக, சீமானுடன் தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால், கூட்டணி விஷயம் தொடர்பாக பரவும் தகவல்கள் அனைத்தும் பொய், ஆதாரமற்றவை என தவெகவின் துணை பொ.செ., ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதை கழக தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனவும், தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 28, 2026

தைப்பூசம் விடுமுறை.. வெள்ளி முதல் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

தைப்பூசம், வார விடுமுறையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. ஜன.30, 31, பிப்.1-ல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. <>www.tnstc.in<<>> இணையதளம் (ம) TNSTC மொபைல் செயலியில் டிக்கெட் புக் செய்யலாம். தைப்பூசத்திற்கு முக்கிய முருகன் கோயிலுக்குச் செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

சில பூச்சிகள் ரீங்காரம் இடுவது ஏன்?

image

தேனீ, சில வண்டுகளின் இறக்கைகள் நொடிக்கு சுமார் 150-250 தடவை சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது. இதுவே ஒரு வண்ணத்து பூச்சியாக இருந்தால் எதுவும் கேட்காது. அதன் சிறகுகள் நொடிக்கு 6-10 தடவை மட்டுமே சிறகடிக்கின்றன. இதே கொசுக்கள் என்றால், அவை நொடிக்கு சுமார் 400-800 முறை சிறகடிப்பதால் காதின் அருகில் வந்தால் மட்டுமே ’கொய்ங்’ என்ற சப்தம் கேட்கிறது.

error: Content is protected !!