News August 10, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.
Similar News
News January 8, 2026
JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 8, 2026
நேரு சிறை செல்வதை இனி தடுக்க முடியாது: அருண்ராஜ்

₹1,020 கோடி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என TVK-வின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக இதை மூடி மறைக்கப் பார்த்தீர்கள்; ஆனால் இனி நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்கள் என்று சாடிய அவர், அமலாக்கத்துறையே நேரடியாகத் தூக்கி உள்ளே வைத்துவிடும் என்ற பயத்தினால் இந்த விசாரணை உத்தரவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
தீர்ப்பளித்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்: கவர்னர் ரவி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கவர்னர் ரவி காட்டமாக விமர்சித்துள்ளார். தீர்ப்பளித்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டது போன்ற சம்பவம் 75 ஆண்டுகால வரலாற்றில் நடைபெற்றதில்லை என்றும் சாடியுள்ளார். இது அரசியலமைப்பை குலைப்பதற்கான முயற்சி என குறிப்பிட்ட ரவி, HC உத்தரவில் மகிழ்ச்சி இல்லையென்றால் SC செல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


