News August 10, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.
Similar News
News February 12, 2026
BREAKING: தேமுதிக கூட்டணி.. பிரேமலதா புதிதாக அறிவித்தார்

தேமுதிக, இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் விரும்பும் அணியில் தேமுதிக இடம் பெறும், அதுகுறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமைச்சர் எ.வ.வேலு, EPS, நயினார் கூறியதை சுட்டிக் காட்டினார்.
News February 12, 2026
2 காதல்.. 2 முறை ஓடிப்போன பெண்!

உ.பி., அலிகர் பகுதியை சேர்ந்த சப்னா தேவிக்கு, தன் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட ராகுலுடன் காதல் மலர, அவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 10 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இதுவே பெரும் விவாதத்திற்குள்ளான நிலையில், தற்போது சப்னா தேவி ராகுலின் சகோதரி கணவருடன் ஓடிப்போய் விட்டாராம். ₹2 லட்சம் & நகைகளையும் அவர் எடுத்து சென்றதாக ராகுல் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த காதலை பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
News February 12, 2026
4,998 பேர் மட்டும் வாங்க.. தவெக விடுத்த வேண்டுகோள்!

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நாளை தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. பிற்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை 4,998 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். ஆதலால், QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டும் நாளை கூட்டத்திற்கு வாருங்கள்; அனுமதி சீட்டு இல்லாதவர்கள் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


