News March 28, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: கற்பியல்
▶ அதிகாரம்: ஊடலுவகை ▶ குறள் எண்: 1323
▶குறள்:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
▶ பொருள்:
நிலத்தோடு மழைநீர் கலந்த பேரழகான காட்சியைப் போல பேரன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதால் வரும் இன்பத்தைவிட தேவருலகிலும் வேறொரு இன்பம் இருக்க வாய்ப்பில்லை.
Similar News
News January 21, 2026
திமுக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: விவசாயிகள்

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாகர்கோவிலில் நடைபெற்ற
விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர், தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
News January 21, 2026
யானை கழிவில் இருந்து சுவையான காபி!

உலகின் மிக அரிய காபியான Black Ivory coffee மிகவும் சுவையாக இருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த காபி தாயாரிக்கப்படும் தாய்லாந்தில், யானைகளுக்கு Arabica காபி செர்ரிகள் வழங்கப்பட்டு, பின்னர் அவற்றின் கழிவுகளில் இருந்து காபி விதைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்து வறுத்து காபி தயாரிக்கப்படுகிறது. யானைகளின் குடலில் உள்ள பாக்டீரியா அதன் கசப்பு தன்மையை குறைக்க உதவுகின்றன.
News January 21, 2026
30 நிமிடம் நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

நடப்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க உதவுவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். தினமும் 8,000 – 10,000 அடிகள் நடப்பதன் மூலம் 400 – 500 கலோரிகளை எரிக்க முடியும். காலை, மதியம், மாலை என்று பிரித்துக்கூட 30 நிமிடங்கள் நடக்கலாமாம். ஆனால் வழக்கத்தைவிட சற்று வேகமாக நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவுமாம்.


