News April 9, 2025
RBI வட்டி குறைத்தாலும், வங்கிகள் குறைப்பதில்லை!

சாமி வரம் தந்தாலும், பூசாரி கருணை காட்டுவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் தான் வங்கிகளின் செயல்பாடு இருக்கின்றன. RBI வட்டியை குறைத்தாலும், பல வங்கிகள் குறைப்பதில்லை. இதனால், ரெப்போ வட்டி குறைப்பு சாமானிய மக்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பல வங்கிகள் வருமானத்தை ஈட்ட வட்டியை குறைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. வங்கிகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்!
Similar News
News December 13, 2025
திருச்சி – காரைக்கால் இடையே வழக்கம் போல் ரயில் இயக்கம்!

திருச்சி – காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமுரெயில் (வண்டி எண் : 76820) வருகிற 14, 16 மற்றும் 18ஆம் தேதிகளில் தஞ்சாவூர்- காரைக்கால் இடையே பகுதியாக இயங்காது என அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ரெயில் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்க மாக காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட நாட்களில் வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும்.
News December 13, 2025
சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News December 13, 2025
பாமகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக

ராமதாஸ், அன்புமணி என 2 தரப்புகளிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது. பாமக வாக்குகள் பிரிந்துவிடாமல் தடுக்க, இருவரையும் சமாதானப்படுத்தி ஒரே சின்னத்தில் போட்டியிட செய்ய அதிமுக விரும்புகிறதாம். இதற்காக இருதரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 50%-ஐ ராமதாஸ் கேட்கும் நிலையில், 75%-ஐ கேட்டு அன்புமணி முரண்டு பிடிக்கிறாராம்.


