News March 20, 2025
“மார்பகங்களை தொட்டாலும் ரேப் முயற்சி இல்லை”

பாலத்துக்கு அடியில் சிறுமியை(11) இழுத்துச் சென்ற 2 இளைஞர்கள், அவளின் மார்பகத்தில் கைவைத்து, பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ ரேப் வழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மார்பகத்தை தொடுவதும், கீழாடை நாடாவை அறுப்பதும் ரேப்புக்கு தயாராவதாக இருக்கலாம். ஆனால் ரேப் செய்ததாகாது என்றும், வழக்குப்பிரிவை மாற்ற உத்தரவிட்டும் தீர்ப்பளித்துள்ளது. உங்க கருத்து?
Similar News
News March 21, 2025
பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுமா?

ஒடிசாவில் கடும் கோடை வெயில் காரணமாக 1-12ம் வகுப்பு வரை அரைநாள் மட்டும் (காலை 6.30 – 10.30 வரை) செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருவதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஒடிசாவை போலவே இங்கும் (TN) பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News March 21, 2025
பங்குச்சந்தையில் அதிக முதலீடு: எச்சரிக்கும் மத்திய அரசு

மக்கள் தங்கள் வங்கி முதலீடுகளை, பங்குச்சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமையும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முறையான ஆய்வுகள் செய்யாமல், மக்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதால் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. மக்களின் முதலீடே வங்கிகளுக்கான நிதி ஆதாரமாகும். அந்த முதலீடுகள் குறைவது, வங்கிகளுக்கு சவாலாகும் என்றும் தெரிவித்துள்ளது.
News March 21, 2025
அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மார்ச் 26 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவித்துள்ளது.