News April 1, 2025

தெருநாய்களை கருணைக் கொலை செய்யுங்க: அன்புமணி

image

ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரேபிஸால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், 70% தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதே இதற்கு தீர்வாக இருக்கும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 27, 2025

அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும்: OPS

image

தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சுகளில் சில ஏற்புடையதாக இல்லை என OPS சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில், முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 27, 2025

Vinayagar Chathurthi: இந்த மந்திரத்தால் செல்வம் பெருகும்!

image

இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில், இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும், 7 ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், வீட்டில் செல்வம் பெருகி, மகிழ்ச்சி கூடும் எனவும் கூறப்படுகிறது.
மந்திரம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. SHARE IT.

News August 27, 2025

இன்று காலை 8 மணிக்கு தயாரா இருங்க மக்களே

image

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி, சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி, பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!

error: Content is protected !!