News April 24, 2024
இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்

இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் வெப்ப அலை வீசியதாகவும், 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.
Similar News
News January 2, 2026
தருமபுரி: கடன் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் நன்மை பெற..!

தருமபுரியில் அமைந்துள்ள ‘கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்’ ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலையின் சங்கமமாகத் திகழ்கிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பக்தர்களுக்கு வேண்டுவதை அருளும் ஒரு புனிதத் தளமாகவும் போற்றப்படுகிறது. மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம், கடன் தொல்லை & வழக்குத் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது.
News January 2, 2026
தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA ஜேசிடி பிரபாகர்

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அண்மையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இப்போது, ஜேசிடி பிரபாகரும் தவெக பக்கம் திரும்பி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News January 2, 2026
காயத்தால் தவிக்கும் TN நட்சத்திரம் சாய்சுதர்சன்

விஜய் ஹசாரே தொடரில் ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்சன் காயமடைந்துள்ளார். ரன் எடுக்க ஓடியபோது கீழே விழுந்த அவருக்கு, விலா எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூரு centre of excellence-ல் சிகிச்சையில் உள்ள சாய் சுதர்சன் வேகமாக குணமடைந்து வருகிறாராம். IPL தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


