News August 11, 2025
இன்று முதல் இபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்

இபிஎஸ் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், இன்று கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அவர், 19-ம் தேதி வேலூரில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கவனித்து வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
ரோஹித்- கோலியின் Future? கங்குலி பதில்!

2027 ODI WC-ல் ரோஹித் & கோலியை விளையாட வைக்க BCCI விரும்பவில்லை என்றும், அவர்கள் இந்த ஆண்டே ODI-ல் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இருவரும் நன்றாக ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் எனக் கூறினார். மேலும், இருவரும் ODI-ல் நிறைய சாதித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
News August 11, 2025
அதிமுக ஆட்சியில் திருப்பூர் புறக்கணிக்கப்பட்டது: CM

திருப்பூர் மாவட்டத்தில் ₹950 கோடியில் முடிவுற்ற 61 திட்டப்பணிகளை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ADMK ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். DMK ஆட்சியில் ₹10,491 கோடியில் மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டமும் DMK ஆட்சியில்தான் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
US செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ

அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 2 மாதங்களில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். 6,500 கிலோ எடையுள்ள பிளாக்-2 ப்ளூபேர்டு செயற்கைக்கோள் 2 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஜூலை 30-ம் தேதி நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த <<17251055>>NISAR <<>>செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது.