News April 19, 2025

அதிருப்தியை சமாளிக்க விருந்து வைக்கும் இபிஎஸ்

image

பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவில் எம்எல்ஏக்கள் உள்பட பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளார். இதனால், ஏப்.23-ம் தேதி இபிஎஸ் தனது வீட்டில் விருந்து வைத்து, அதிருப்தியில் இருப்பவர்களை சமாதனம் செய்ய செய்யவிருக்கிறார். இந்த விருந்தில் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

Similar News

News April 19, 2025

திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்கத் திட்டம்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, கட்சியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமையகத்தில் கடந்த சில நாள்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 52 மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டதில் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News April 19, 2025

நடிகை ஸ்ரீதேவி மரணம்.. சந்தேகம் எழுப்பும் இந்தி நடிகர்

image

தமிழ் திரையுலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிறகு, போனி கபூரை திருமணம் செய்து பாலிவுட்டில் செட்டினாலார். 2018-ல் துபாயில் பாத்டப்பில் தடுக்கி விழுந்து அவர் பலியானார். அவர் உயிர் நீத்து 7 ஆண்டுகளாகிய நிலையில், இந்தி நடிகர் நசீர் அப்துல்லா திடீரென சந்தேகம் எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி மரணத்தில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாகவும், அதற்கான விடைகளை மக்கள் அறிவது அவசியம் என கூறியுள்ளார்.

News April 19, 2025

இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

image

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

error: Content is protected !!