News April 8, 2024
நீலிக்கண்ணீர் வடிக்கும் இபிஎஸ்

ஆட்சியில் இருக்கும் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இழிவுப்படுத்திய இபிஎஸ் தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, 2003ஆம் ஆண்டு ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சி தான் என திமுக விமர்சித்துள்ளது.
Similar News
News April 9, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர் அபு ஹாசிம் கான் சவுத்ரி(89) உடல் நலக்குறைவால் காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 3 முறை MP ஆகவும், 2012 முதல் 2014 வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில் அபு ஹாசிம் கான் சவுத்ரி மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவற்றை உயர்த்திப் பிடித்தவர் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
மத்திய அரசிடம் வீரத்தை காட்டுங்க EPS: அன்பில்

EPS ஒருமுறையாவது நீட் வேண்டாம் என்றோ, மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள் என்றோ PM மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறாரா என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். CM ஸ்டாலின் பற்றி விமர்சிக்கும் EPS-க்கு பதிலடி கொடுத்த அவர், அண்ணா பெயரில் கட்சி வைத்துகொண்டு, இருமொழி கொள்கையை காக்க EPS-ஆல் முடிந்ததா எனவும் கேட்டார். மத்திய அரசிடம் வீரத்தை காட்டாமல் CM மீது மலிவான விமர்சனத்தை கொட்டுவதாகவும் சாடியுள்ளார்.
News April 9, 2026
3 மாநில தேர்தல்: 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

பிற்பகல் 3 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 72.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 62.71% மற்றும் அசாமில் 75.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. வெயில் சுட்டெரித்த போதும், வாக்குச்சாவடிகளில் போதுமான வசதிகள் செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அசாமில் 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், புதுச்சேரி, கேரளாவில் 6 மணியுடன் நிறைவடைகிறது.


