News April 1, 2025
அவதூறு வழக்கில் ஆஜராக இபிஎஸ்-க்கு சம்மன்

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இபிஎஸ் ஆஜராக கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோவையில் பேட்டியளித்தபோது, தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி. பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும் என இபிஎஸ்-க்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
Vinayagar Chathurthi: இந்த மந்திரத்தால் செல்வம் பெருகும்!

இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில், இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும், 7 ஜென்மத்து பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், வீட்டில் செல்வம் பெருகி, மகிழ்ச்சி கூடும் எனவும் கூறப்படுகிறது.
மந்திரம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. SHARE IT.
News August 27, 2025
இன்று காலை 8 மணிக்கு தயாரா இருங்க மக்களே

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி, சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி, பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!
News August 27, 2025
பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், பிற்பகல் 2.40 மணிக்கு ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.