News April 1, 2025
அவதூறு வழக்கில் ஆஜராக இபிஎஸ்-க்கு சம்மன்

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் இபிஎஸ் ஆஜராக கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோவையில் பேட்டியளித்தபோது, தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி. பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராக வேண்டும் என இபிஎஸ்-க்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 15, 2026
5 மாநில தேர்தல்: சற்றுமுன் ECI அழைப்பு விடுத்தது

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பட்டியல் மாலை 4 மணிக்கு வெளியாகிறது. இதற்காக பத்திரிகையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ECI அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக தேர்தல் தேதி இன்று வெளியாகும் என <<19387178>>ANI நிறுவனம் தகவலாக<<>> செய்தி வெளியிட்டிருந்தது. சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாலை 4 மணிக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
News March 15, 2026
விஜய்க்கு NDA கொடுத்த ஆஃபர்.. அரசியல் பரபரப்பு

2026 பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு 80 சீட்டுகள் மற்றும் துணை முதல்வர் பதவியை வழங்க அதிமுக தலைமையிலான NDA கூட்டணி முன்வந்துள்ளதாக சற்றுமுன் India Today நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று தனியார் செய்தி நிறுவனத்தில் <<19385898>>நிகழ்ச்சியில் பேசிய EPS<<>>, விஜய் உடன் எந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார். ஆனால், டெல்லி பாஜகவினர் விஜய் தரப்பிடம் தீவிரமாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
கேஸ்.. பெர்சிய பகுதியில் இந்திய போர் கப்பல்கள்

LPG வாயுவை சுமந்துவரும் ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய 2 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துவிட்டன. 2 கப்பல்களுக்கு மார்ச் 21-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய போர் கப்பல்கள் பெர்சிய வளைகுடா அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


