News March 27, 2025
அதிமுகவினருக்கு இபிஎஸ் திடீர் அறிவுறுத்தல்!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை CM ஸ்டாலின் முன்மொழியவுள்ளார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக MLAக்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பேரவையில் அதிமுகவினர் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 29, 2025
Ro-Koவால் தூக்கமில்லாமல் இருந்துள்ளேன்: மோர்கல்

SA-க்கு எதிரான முதல் ODI, நாளை (நவ.30) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரோஹித், கோலி இருவரும் ODI-ல் எப்படி விளையாடுவது என்ற அனுபவத்தை கொண்டிருப்பார்கள் என்று நம்புவதாக, பவுலிங் கோச் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். தான், Ro-Ko-வுக்கு எதிராக பந்து வீசியபோதெல்லாம், பல தூக்கமில்லாத இரவுகளை கழித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
News November 29, 2025
வெள்ளம் நிவாரண முகாமாக மாறும் கொழும்பு ஸ்டேடியம்

‘டிட்வா’ புயல், இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வெள்ளம் & நிலச்சரிவால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், கொழும்பு பிரேமதாஸ ஸ்டேடியத்தில், சுமார் 3,000 பேரை தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு அடிப்படை வசதிகள், நிவாரண பொருள்களும் வழங்கப்படவுள்ளன.
News November 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 534 ▶குறள்: அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. ▶பொருள்: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.


