News August 31, 2025

‘இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார்’

image

கூட்டணி உடன்படிக்கை விவகாரத்தில் இபிஎஸ், முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை தி.நகரில், தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திடுவார்கள். அப்படித்தான் 2024 தேர்தலில் இபிஎஸ் கையெழுத்திட்டார். ஆனால், பேசியபடி ராஜ்யசபா சீட்டு வழங்கவில்லை என கூறியுள்ளார்.

Similar News

News September 3, 2025

10% கமிஷன் வாங்கும் அமைச்சர்: இபிஎஸ் அட்டாக்

image

எங்கு பத்திரப்பதிவு நடந்தாலும் அமைச்சர் மூர்த்தி 10% கமிஷன் வாங்குவதாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் EPS பேசியுள்ளார். பத்திரப் பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை நடைபெறுகிறது என மக்கள் பேசுவதாக கூறிய அவர், அமைச்சருக்கு கமிஷன் கொடுக்காவிட்டால் சொத்தை பதிவு செய்ய முடியாது எனவும் அந்தளவு அவல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News September 3, 2025

தவெக – காங்., கூட்டணி? செல்வப்பெருந்தகை மறுப்பு

image

2026 தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய கூட்டணியை அமைக்கும் முனைப்பில் தவெக ஈடுபட்டு வருகிறது. இதற்காக தவெக – காங்., இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது பற்றி யாரும் தவெகவில் இருந்து பேசவில்லை என்ற அவர், காங்.,ன் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவெடுக்கும் எனத் தெரிவித்தார்.

News September 3, 2025

விஜய்யுடன் இணைய போகும் 3 முக்கிய தலைவர்கள்?

image

சசிகலா, OPS-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சி மேற்கொண்டதால்தான் செங்கோட்டையன் – EPS இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. EPS விடாப்பிடியாக இருப்பதால் மீண்டும் இணைப்புக்கு சாத்தியமில்லை என தெரிகிறது. ஏற்கெனவே TTV, OPS ஆகியோர் தவெகவுடன் கூட்டணி செல்லலாம் என பேசப்படுகிறது. செங்கோட்டையனும் விஜய்யுடன் இணைந்தால், கொங்கு, தென்மாவட்டங்களில் தவெக பலம்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!