News March 17, 2025
சட்டப்பேரவையில் EPS, செங்கோட்டையன் பேச்சு

கடந்த சில நாள்களாக EPSஐ சந்திப்பதை தவிர்த்துவந்த செங்கோட்டையன், இன்று சட்டப்பேரவையில் அவருடன் பேசினார். டிவிஷன் வாரியான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதன் விதிகள் புரியாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட, அதனை செங்கோட்டையன் EPSக்கு தெளிவாக புரிய வைத்தார். பின்னர், பேரவைக்கு வெளியே பேட்டி கொடுத்த EPS, தனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்தவித மோதலும் இல்லை என்று கூறினார்.
Similar News
News March 17, 2025
சாவை பார்த்து பயமா.. எனக்கா..? மோடி தெறி பதில்

‘பாட் காஸ்ட்’ நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், ‘மரணத்தை நினைத்து நீங்கள் என்றாவது பயந்தது உண்டா?’ எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோடி, நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயமாகி விட்டதாகவும், நிச்சயமாக நடக்கப் போகும் ஒரு விஷயத்தை பற்றி எதற்கு பயப்பட வேண்டும்? என்றும் வினவினார். அதனால், மரண பயத்தை புறந்தள்ளி வாழ்க்கையை நேசிக்க வேண்டும் எனக் கூறினார்.
News March 17, 2025
சதுர்கிரஹி யோகம்: அடித்து தூக்க போகும் 3 ராசிகள்

சூரியன், புதன், சுக்கிரன், ராகு என 4 கிரகங்கள் தற்போது மீன ராசியில் சஞ்சரித்துள்ளன. இதனால் சதுர்கிரஹி யோகம் உருவாகியுள்ளது. இது தனுசு, கடகம், விருச்சிகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு யோகத்தை அள்ளித் தர போகிறது. நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை மேலோங்கும். புதிய பதவி மற்றும் கெளரவம் கிடைக்கும். சட்ட சிக்கல்கள் தீரும். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
News March 17, 2025
திருப்பதி கோயில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…!

ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்லத் தோன்றும் கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். அங்கு ஜூனில் நடைபெறும் சுப்ரபாதம், அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான தரிசன டிக்கெட் பெற நாளை (மார்ச் 18) முதல் மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பக்தர்கள் டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.