News March 17, 2025
சட்டப்பேரவையில் EPS, செங்கோட்டையன் பேச்சு

கடந்த சில நாள்களாக EPSஐ சந்திப்பதை தவிர்த்துவந்த செங்கோட்டையன், இன்று சட்டப்பேரவையில் அவருடன் பேசினார். டிவிஷன் வாரியான வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதன் விதிகள் புரியாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட, அதனை செங்கோட்டையன் EPSக்கு தெளிவாக புரிய வைத்தார். பின்னர், பேரவைக்கு வெளியே பேட்டி கொடுத்த EPS, தனக்கும் செங்கோட்டையனுக்கும் எந்தவித மோதலும் இல்லை என்று கூறினார்.
Similar News
News March 17, 2025
தமிழ்நாட்டில் டாப்… பரோட்டாவுக்கு அங்கீகாரம்

பரோட்டா நல்லதா கெடுதலா என்று விவாதம் நடந்தாலும், தமிழ்நாட்டு பரோட்டாவுக்கு தனி மவுசு உண்டு. அதற்கு புகழ் சேர்க்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. Taste Atlas என்ற உணவு நிறுவனம், உலகின் 50 சிறந்த பிரெட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பட்டர் கார்லிக் நாண் முதலிடம் பிடித்துள்ளது. 6வது இடத்தில் இருப்பது நம்ம பரோட்டா தான். இந்த செய்தியை பரோட்டா பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 17, 2025
தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் பணம் திருப்பி தரப்படுமா?

ரயிலில் அவசர பயணம் செய்வோருக்கு, பயண நாளுக்கு முந்தைய தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் டிக்கெட் வசதியை ரயில்வே செய்து தந்துள்ளது. சாதாரண பெட்டிக்கு காலை 11 மணி, ஏசி பெட்டிக்கு காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கும். மற்ற டிக்கெட்டை விட இது சற்று விலை அதிகமாகும். இதில் ரயில் ரத்தானால் மட்டுமே கட்டணம் திருப்பித் தரப்படும். டிக்கெட்டை பயணி ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது.
News March 17, 2025
ஊழல் புகாருக்கு ஆதாரம் எங்கே? ரகுபதி விளாசல்

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் எனத் தெரிவிப்பதற்கு ஆதாரம் எங்கே? என்று சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். ED-யை பாஜக கேடயமாக பயன்படுத்துகிறது எனவும், முதல்வர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை தவறாக பேசி இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். CM ஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் கொடுக்க மாட்டார், திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.