News October 23, 2025
லோடு மேன் பேச்சை கேட்டு EPS கூறுகிறார்: உதயநிதி

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
News October 24, 2025
வரலாற்றில் இன்று

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்
News October 24, 2025
மது விற்பனை குறைக்க அரசு முயற்சி: முத்துசாமி

தீபாவளியையொட்டி ₹790 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக அரசு மது விற்பனைக்கே முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் அரசு மது விற்பனை குறைக்கவே முயற்சி எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.