News September 5, 2025
செங்கோட்டையன் முடிவுக்கு இபிஎஸ் ரியாக்ஷன்

கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை ஒன்றிணைக்க, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்துள்ள நிலையில், அது தொடர்பாக பேச EPS மறுத்துவிட்டார். தேனியில், செய்தியாளர்கள் சந்திப்பு திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்துவிட்டு OPS-ன் சொந்த தொகுதியான போடிக்கு பரப்புரைக்கு சென்றுள்ளார். இதனிடையே, செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக EPS-ன் முடிவுக்கு கட்டுப்படுவோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
Similar News
News September 5, 2025
தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா!

TN அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியாகி உள்ளது. R.காந்தி (₹47.94 கோடி), TRB ராஜா (₹41.81 கோடி), பழனிவேல் தியாகராஜன் (₹38.89 கோடி), துரைமுருகன் (₹30.80 கோடி), உதயநிதி (₹29.07 கோடி), எ.வ.வேலு (₹23.32 கோடி), சாமிநாதன் (₹21.07 கோடி), ரகுபதி (₹15.32 கோடி), முத்துசாமி (₹13.68 கோடி) சிவசங்கர் (₹13.55 கோடி) ஆகியோர் முதல் 10 இடத்தில் உள்ளனர். ( ADR REPORT தரவுகளின் அடிப்படையில் சொத்து மதிப்பு)
News September 5, 2025
மும்பையில் 34 இடங்களில் வெடிகுண்டு? உச்சபட்ச அலர்ட்

மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு மெஸேஜ் வந்துள்ளது. லஷ்கர் – இ – ஜிகாதி என அறிமுகப்படுத்தி கொண்ட நபர் அனுப்பிய மெசேஜில், 14 பாக்., தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், 34 கார்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்படிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 1 கோடி பேரை கொல்ல 400 கிலோ RDX வைக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
News September 5, 2025
விரைவில் குட்நியூஸ் சொல்லப் போகும் மத்திய அரசு?

டிரம்பின் 50% வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு விரைவில் சலுகைகள் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல், ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின்’ ஒரு பகுதியாக, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. டிரம்பின் வரிவிதிப்பால் ஜவுளி, ஆபரணங்கள் & Gems, என பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.