News January 22, 2025
வாக்குகள் சிதறாமல் இருக்க இபிஎஸ் போடும் திட்டம்

வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்றோம். ஆனால், வாக்குகள் சிதறாமல் இருக்க எதிரணியினர் வியூகம் வகுக்கின்றனர். அதிமுகவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்றார். இது, அதிமுகவின் கூட்டணி கதவு திறப்புக்கான க்ரீன் சிக்னல் என பலரும் பேசி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
விஜய்க்காக ‘மொட்டை’ அடித்த பெண்

கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த தவெக பெண் தொண்டர் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், இந்த முடி காணிக்கையை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அப்பெண் அறிவித்துள்ளார்.
News December 9, 2025
புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.
News December 9, 2025
லஞ்சம் கேட்குறாங்களா? இந்த நம்பருக்கு உடனே அடிங்க

அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். உடனடியாக 1064 / 1965 -க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in-க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்தவரின் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான இன்று (டிச.9), லஞ்சத்துக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்க அனைவரும் முன்வருவோம். SHARE.


