News January 22, 2025

வாக்குகள் சிதறாமல் இருக்க இபிஎஸ் போடும் திட்டம்

image

வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்றோம். ஆனால், வாக்குகள் சிதறாமல் இருக்க எதிரணியினர் வியூகம் வகுக்கின்றனர். அதிமுகவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்றார். இது, அதிமுகவின் கூட்டணி கதவு திறப்புக்கான க்ரீன் சிக்னல் என பலரும் பேசி வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

இந்த நாள்களில் மிக மிக கவனம் மக்களே!

image

காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு நவ.28-ல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.29-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட், டிச.1-ல் திருவள்ளூருக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.26, 27 ஆகிய 2 நாள்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

News November 25, 2025

ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

image

ராமர் கோயி​லின் கட்​டு​மானப் பணி​கள் நிறைவடைந்ததை குறிக்​கும் வகை​யில் இன்று கொடியேற்​றும் விழா நடை​பெற உள்​ளது. PM மோடி இவ்​விழா​வில் பங்கேற்று, கோயி​லின் 161 அடி உயர கோபுரத்​தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்​கிறார். இதற்​காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்​கும் வகை​யில் சூரிய சின்​னம், மையத்​தில் ஓம் மற்​றும் மந்​தாரை மரம் பொறிக்​கப்​பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

image

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!