News June 15, 2024
மாவட்டச் செயலாளர் பதவிகளை மாற்ற இபிஎஸ் திட்டம்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மீது இபிஎஸ் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் கட்சியை மாவட்ட ரீதியில் மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 தொகுதிகளுக்கு ஒருவர் விதம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதற்கான பட்டியலை இபிஎஸ் தயாரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News March 1, 2026
முருகனிடம் வேண்டிய போது வருத்தமாக இருந்தது: PM

தமிழக மக்களின் நலனுக்காக திருப்பரங்குன்றம் முருகனிடம் வேண்டிக்கொண்டதாக PM மோடி கூறியுள்ளார். இந்த தரிசனம் ஆன்மிக நிறைவை தந்தபோதும், மனம் வருத்தமடைந்தது என்று பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூரணசந்திரனை நினைத்து வருந்தினேன் என கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 1, 2026
210 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைப்போம்: EPS

வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என EPS தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் பணி உள்பட பல திட்டங்களை DMK அரசு முடக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு TN-க்கு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும், மத்தியில் காங்., ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது TN-க்கு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 1, 2026
PM KISAN திட்ட தவணை ₹2,000.. வந்தது UPDATE

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை (₹2,000) எப்போது கிடைக்கும் என்பதே நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்பே (மார்ச் 4) பணம் வரவு வைக்கப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனினும், மார்ச்சில் ₹2,000 கிடைக்க வாய்ப்புள்ளதாம். அதற்குள் KYC அப்டேட் உள்ளிட்டவற்றை நிறைவு செய்யுங்கள் விவசாய பெருமக்களே!


