News April 17, 2025
EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. ₹100 கொடுத்தால் போதும் போராட்டத்துக்கு வந்துவிடுவார்கள் என மூதாட்டி ஒருவரை கேலி செய்யும் வகையில், பகிரப்பட்ட Meme-ஐ கங்கனா ரனாவத் Retweet செய்திருந்தார். இதற்கு எதிராக மூதாட்டியின் கணவர் பஞ்சாப் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜரான கங்கனா தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்.
News October 28, 2025
புதுச்சேரி ஆளும் கூட்டணியில் இருந்து விலகினார்

சுயேச்சை MLA நேரு, ‘நமது மக்கள் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 2021 தேர்தலில் உருளையன்பேட்டையில் வென்ற அவர், ஆளும் NR காங்கிரஸுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதனிடையே, CM ரங்கசாமி, பாஜகவுடன் சேர்ந்து தனது தனித்தன்மையை இழந்ததால் புதிய கட்சி தொடங்க வேண்டிய நிலை உருவானதாக நேரு கூறினார். கட்சி தொடக்க விழாவில் பெரியார் படம் இல்லாதது சலசலப்பை ஏற்படுத்தியது.
News October 28, 2025
நாட்டின் பணக்கார மாவட்டங்களின் டாப் 5 லிஸ்ட்!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 2025 மாதத்தின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்யவும்.


