News April 17, 2025

EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

image

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

5 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: அமுதா

image

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ புயலால் காற்று மற்றும் மழை அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் வரும் 30-ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News November 27, 2025

BREAKING: செங்கோட்டையனுக்கு பதவி.. விஜய் அறிவித்தார்

image

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News November 27, 2025

துயரத்தில் தோள் கொடுப்பதே நட்பு❤️

image

மங்களகரமாக நடைபெறவிருந்த திருமணம் திடீரென நின்றதால், <<18381176>>ஸ்மிருதி மந்தனா<<>> பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இத்தகைய இக்கட்டான சூழலில் தனது தோழியுடன் நிற்க வேண்டும் என கருதிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸி.,யில் நடைபெறும் WBBL தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த கோரிக்கையை அவர் விளையாடி வந்த Brisbane Heat அணியும் ஏற்றுக்கொண்டது. தோழிக்காக ஜெமிமா செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!