News April 17, 2025

EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

image

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

பட நிகழ்ச்சியில் பாடல் பாடியதற்கு ₹1 கோடி சம்பளமா?

image

பட தயாரிப்பை விட, அதன் புரமோஷனுக்கே அதிகம் செலவிடுவதற்கு சமீபத்தில் நடந்த ‘வாரணாசி’ பட நிகழ்ச்சியே சாட்சி. டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் ₹27 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மற்றுமொரு ஆச்சரியமடைய வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. இதே ஈவென்ட்டில், ஒரு பாடல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்ருதிஹாசனுக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 21, 2025

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், முதலில் சூடுபிடித்த சிபிஐ விசாரணையில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிய நேரத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நவ.27-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கொலை குறித்த மேலும் பல உண்மைகள் குற்றப்பத்திரிகையில் வெளியாக வாய்ப்புள்ளது.

News November 21, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள்: முக்கிய அம்சங்கள் 1/2

image

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சலுகைகள் (சமூக பாதுகாப்பு, சம்பளத்துடன் விடுப்பு, ஒராண்டுக்கு பின் gratuity) *Gig, Platform பணியாளர்களுக்கு அங்கீகாரம். *அனைத்து பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு *எத்துறையாக இருந்தாலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம். *அனைவருக்கும் இலவச ஹெல்த் செக்-அப்.

error: Content is protected !!