News April 17, 2025
EPS, OPS நேரில் ஆஜராக உத்தரவு

இரட்டை இலை விவகாரத்தில் EPS, OPS வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்ததால், அவர்களும் நேரில் ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 28-ம் தேதி விசாரணையை தொடங்குவதால், மாலை 3 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
ChatGPT-ஐ மக்கள் இதற்கு தான் யூஸ் பண்றாங்களா!

உலகளவில் மக்கள், AI சாட்பாட்டான ChatGPT-ஐ எதற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து OpenAI ஆய்வு நடத்தியது. அதில் உலக மக்களில் 49% பேர் கேள்விகளை கேட்டு பதில் பெறும் அஸிஸ்டெண்டாகவும், 40% பேர் ஒரு வேலையை செய்து முடிக்க அதை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல், உலகில் ChatGPT-ஐ அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
தவெகவில் இணைகிறேனா? அதிகாரப்பூர்வ விளக்கம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய புகழேந்தி, தான் தவெகவில் இணையவில்லை. ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது; அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு வேட்டாக மாறும் என்றார்.
News September 18, 2025
கால் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்வது முதுகு, இடுப்பு & கால்தசைகளை வலுவாக்கும்.
*கால்களை நேராக நீட்டி படுக்கவும் *வலது காலை மடித்து, மார்பு வரை கொண்டு வந்து, வலது பெருவிரலால் பிடித்து கொள்ளவும் *இப்போது காலை மேல் நோக்கி நேராக நீட்டவும் *உதவிக்கு யோகா பட்டையை பயன்படுத்தலாம் *இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, காலை மாற்றி செய்யவும். SHARE IT.