News January 3, 2025
செல்வாக்கை மீட்க துடிக்கும் இபிஎஸ்: அமைச்சர் தாக்கு

தனது கட்டுபாட்டில் இருந்து அதிமுக கை நழுவி போய்விடுமோ என EPS அச்சத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். EPS மட்டமான அரசியல் செய்வதாகவும், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீண் வதந்தி பரப்புபவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 4, 2025
தமிழக தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.
News December 4, 2025
தமிழ்நாட்டில் Financial Pollution: MP வில்சன்

TN-க்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு ‘நிதி மாசுபாட்டை’ உருவாக்கியுள்ளதாக பார்லி.,யில் MP வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை பட்டியலிட்ட அவர், ஜல் ஜீவன் திட்டத்தில் ₹3,112 கோடி, நெல் கொள்முதல் & மானியங்களுக்காக ₹2,670 கோடி, சமக்ர சிக்ஷாவுக்கு ₹3,548 கோடி இன்னும் வராமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான நீதியை உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: விலை ₹1000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹200-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹2,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால், நம்மூரிலும் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


