News January 3, 2025
செல்வாக்கை மீட்க துடிக்கும் இபிஎஸ்: அமைச்சர் தாக்கு

தனது கட்டுபாட்டில் இருந்து அதிமுக கை நழுவி போய்விடுமோ என EPS அச்சத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். EPS மட்டமான அரசியல் செய்வதாகவும், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீண் வதந்தி பரப்புபவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 5, 2025
சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக: அண்ணாமலை

திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் 161 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
News December 5, 2025
சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தவெக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, தவெகவின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிச.6, 7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பூத் என்றால் என்ன?, SIR என்றால் என்ன? என்பது பற்றியும், உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
News December 5, 2025
சங் பரிவார் அமைப்புகளுக்கு பா.ரஞ்சித் எச்சரிக்கை

தமிழகத்தில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பை பாஜகவும், அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக உருவாக்கி வந்ததாக பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார். பன்முகத்தன்மையை பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சிதைக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்த அமைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்தியுள்ளார்.


