News August 23, 2025

தனிப்பெரும்பான்மை ஆட்சி.. அழுத்தி சொன்ன இபிஎஸ்

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெல்லை மாநாட்டில் நேற்று பேசிய அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் என மீண்டும் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், அதற்கு மாறாக பேசியுள்ளார். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக அவர் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?

Similar News

News August 24, 2025

ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலை பார்ப்பது யார்?

image

ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலைப் பார்ப்பதில் முக்கியமானவர் வழக்கறிஞர் கே.பாலு என MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் எனச் சொல்லிக்கொண்டு அன்புமணியைத் தவறாக வழிநடத்துவதாகவும் கூறினார். பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி என்றும், அதை மறைத்து கே.பாலு போன்றவர்கள் வசதிக்கேற்ப பேசுவதாகவும் அதில் துளியும் உண்மை இல்லை என்றார்.

News August 24, 2025

CM ஸ்டாலினை சந்திக்க வருகிறார் பி.சுதர்சன் ரெட்டி

image

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்.09-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி,
CM ஸ்டாலினை நேரில் சந்திக்க இன்று சென்னை வருகிறார். தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருகிறார்.

News August 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 437 ▶குறள்: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ▶ பொருள்: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

error: Content is protected !!