News October 14, 2025

அதிமுக MLA-க்களுடன் EPS முக்கிய ஆலோசனை!

image

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக MLA-க்களுடன் பேரவை வளாகத்தில் EPS ஆலோசனை நடத்தினார். இதில், கரூர் துயர சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அதிமுக சார்பில் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள 3 நாள்களில் எழுப்ப வேண்டிய மக்கள் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

பெளர்ணமி நிலவாய் பிரகாசிக்கும் ருக்மினி!

image

‘என் மூச்சவ பேச்சவ, பேர் சொல்லும் அழகவ, எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ’ என்ற ‘டியூட்’ பாடல் வரிகளை தமிழ் ரசிகர்களை ரிபீட் மோடில் பாட வைத்துவிட்டார் ருக்மினி வசந்த். மூன்றே படத்தில் ரசிகர்களின் மனதில் அடுத்த 30 வருடங்களுக்கு குடியேறிவிட்ட அவர், புதிய போட்டோஷுட் நடத்தி SM-ல் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹார்ட் பதிவிடும் ரசிகர்கள், அடுத்த தமிழ் படத்தின் அப்பேட் கேட்டு அன்பு தொல்லை கொடுக்கின்றனர்.

News October 14, 2025

RBI-யின் புதிய Digital money: பேமென்டுக்கு NO இண்டர்நெட்

image

இண்டர்நெட் கிடைக்கவில்லை என்றால் UPI பேமண்ட் செய்ய முடியாமல் பலர் தவிப்பதை பார்க்க முடியும். அவர்களுக்காகவே RBI புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது ‘ஆஃப்லைன் டிஜிட்டல் ரூபாய்’ என்ற திட்டத்தின் மூலம் Digital money-ஐ நிஜமான பணத்தை போலவே பயன்படுத்தலாம். UPI ஸ்கேனர் மூலம் இந்த பணத்தை செலுத்தலாம். இண்டர்நெட் கிடைத்தவுடன் பணம் RBI கணக்கில் வரவு வைக்கப்படும். SHARE IT.

News October 14, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின்

image

ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் சதீஷ் சிவா, ஹரிஹரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மறைந்த ரவுடி நாகேந்திரனின் மரணத்தால், இறுதிச் சடங்குகள் செய்ய அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு 28-ம் தேதி வரை ஜாமின் தரப்பட்டுள்ளது.

error: Content is protected !!