News January 23, 2025
இபிஎஸ்-க்கு வேலை கிடையாது: அமைச்சர் சேகர் பாபு

திமுக அரசை குறை கூறுவதை தவிர இபிஎஸ்-க்கு வேறு எந்த வேலையும் கிடையாது என அமைச்சர் சேகர் பாபு குறை கூறியுள்ளார். இபிஎஸ் போன்று யாரையும் குறைகூற வேண்டிய அவசியம் திமுகவுக்கும் இல்லை என்றும், மக்கள் பணியாற்றவே அரசுக்கு நேரம் சரியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் செய்திகளில் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இபிஎஸ் அரசை விமர்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News November 28, 2025
ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, <<18379714>>ரெட் அலர்ட்<<>>, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்
News November 28, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்

இரட்டை வரி விதிப்பு விவகாரம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில், பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு இன்று மாலையில் இருந்து பஸ் சேவை இயக்கப்படும் என ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
தவெக எலி, அதிமுக புலி: ஜெயக்குமார் பாய்ச்சல்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாகவே இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, தவெகவை எலி என்றும், அதிமுகவை புலி எனவும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்தவர் என்றும், அவர் எங்கிருந்தாலும் வாழ்க எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


