News August 6, 2024
பெட்ரோல் குண்டுவீச்சுக்கு இபிஎஸ் கண்டனம்

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்கே தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்மொழிகள்

*நினைத்த காரியத்தை முடித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்களுக்கு, உலகமே வழிவிடும். * வெறுப்பினால் எதையும் சாதிக்க முடியாது. அன்பினால் எதையும் வெல்ல முடியும். *காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இன்று உயர்ந்தவர்கள் நாளை வீழ்வார்கள், இன்று வீழ்ந்தவர்கள் நாளை உயர்வார்கள். *நேரடியாகத் தாக்கும் பகையை விட, புன்னகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வஞ்சகம் மிகவும் ஆபத்தானது.
News March 16, 2026
இனி சிலிண்டருக்கும் பூட்டு போடனும்!

தங்கத்தை பாதுகாப்பது போல் கேஸ் சிலிண்டரை பாதுகாக்கும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. ஆமாங்க, மத்திய பிரதேசத்தில் வீட்டில் இருந்த பெண்ணை தாக்கிவிட்டு கேஸ் சிலிண்டரை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிலிண்டரை ஜெயின் போட்டு பூட்டி வைத்துள்ளனர். உங்க வீட்டு சிலிண்டர் பத்திரமா இருக்கா?
News March 16, 2026
டான்ஸிங் ஏவுகணையை பயன்படுத்திய ஈரான்

ஈரான் இந்த போரில் முதல்முறையாக சக்திவாய்ந்த செஜ்ஜில் என்ற ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது. ஏவுகணைகளை தடுத்து அளிக்கும் அயன் டோமை தாண்டி இலக்குகளை தாக்கு திறன் கொண்ட இதற்கு, டான்ஸிங் ஏவுகணை என்ற பெயரும் உள்ளது. 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கு திறன் கொண்ட டான்ஸிங் ஏவுகணை, ஈரானின் முக்கியமான துருப்பு சீட்டாகவும் பார்க்கப்படுகிறது.


