News September 23, 2025
ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்: EPS உறுதி

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், குன்னூரில் EPS பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது குன்னூருக்காக திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என குற்றம்சாட்டிய அவர், அதிமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி திமுக புகழ் தேடிக்கொள்கிறது என பேசினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் உள்ள வீடில்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
Similar News
News September 23, 2025
+2 போதும்.. மத்திய அரசில் ₹21,700 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹21,700- ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News September 23, 2025
திமுக கூட்டணியில் பூசல்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பிரச்னை ஆரம்பித்துவிட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்க ஆரம்பித்துவிட்டதாகவும், இதனால் இருகட்சிகளுக்கு இடையே பூசல் வெடித்துள்ளதாகவும் அவர் பிரசாரத்தில் பேசியுள்ளார். மேலும், காங்கிரசாருக்கு இப்போதாவது ஞானோதயம் வந்ததே என கூறிய அவர், விரைவில் திமுக கூடாரம் காலி ஆகிவிடும் என கூறியுள்ளார்.
News September 23, 2025
BREAKING: மழை வெளுத்து வாங்கும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், செப்.29 வரை மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. செப்.25, 26, 27-ல் சில மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.