News August 26, 2024

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் இபிஎஸ்

image

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இபிஎஸ் நாளை நேரில் ஆஜராகிறார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மத்திய சென்னை தொகுதிக்கான நிதியை தயாநிதி மாறன் முறையாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக தயாநிதி அவதூறு வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் இபிஎஸ் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.

Similar News

News March 5, 2026

தவெகவுடன் கூட்டணி.. ராகுலை தடுத்தாரா கார்கே?

image

தவெகவுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெறுவதோடு, TN-ல் காங்கிரஸை வலுப்படுத்தலாம் என ராகுல் காந்தி கணக்கிட்டாராம். ஆனால், தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறிக்க கூடாது; மத்தியில் பாஜக அரசை எதிர்கொள்ள திமுக MP-க்களின் பலமும் தேவை என ராகுலிடம் கார்கே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தவெக தனது வாக்குவங்கியை நிரூபித்தால், அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து பார்க்கலாம் என கார்கே கூறினாராம்.

News March 5, 2026

பாஜக புகுந்த மாநிலம் உருப்படாது: ப.சிதம்பரம்

image

ஆமை புகுந்த வீடும், அமித்ஷா புகுந்த வீடும் உருப்படாது; அதுபோல பாஜக புகுந்த மாநிலமும் உருப்படாது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக அடுத்த 5 ஆண்டுகளில் இருக்குமா என்றே தெரியவில்லை என சாடினார். தமிழ்நாட்டில், பாஜக நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம் எனக்கூறிய அவர், இதுதான் திமுகவுடன் கூட்டணி அமைக்க முக்கிய காரணம் என்றார்.

News March 5, 2026

மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. அதிர்ச்சி

image

OPS திமுகவில் இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளராக இருந்த Ex MLA மற்றும் MP-யான வெ. ஏழுமலை, 2 நாளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.பி.பாலாஜி, முன்னாள் அமைச்சர் T.ராமசாமி மகன் T.R.சீனிவாசன், ராமநாதபுரம், தேனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் EPS-ஐ சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

error: Content is protected !!