News April 7, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டு… அமைச்சர் ரகுபதி மறுப்பு!

டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News October 18, 2025
பவன் கல்யாணை இயக்கும் லோகேஷ்?

‘ஜனநாயகன்’, யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படங்களை தயாரிக்கும் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக பவன் கல்யாணை ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். அந்த பட்டியலில் லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் ஆகியோர் இருக்கிறார்களாம். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர்தான் பவன் கல்யாண் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 18, 2025
யாரை ஏமாற்றுகிறார் CM ஸ்டாலின்? அண்ணாமலை

ஆணவப்படுகொலையை தடுக்க ஆணையம் அமைத்து யாரை ஏமாற்றுகிறார் CM ஸ்டாலின் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியல் & பழங்குடி சமூகத்தினர் மீதான வன்முறை 68% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாக தெரியவில்லை எனவும் ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை CM வீணடிக்கிறார் எனவும் சாடியுள்ளார்.
News October 18, 2025
தீபாவளி விடுமுறை.. மேலும் ஒரு ஹேப்பி நியூஸ்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், பலர் பேருந்து கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.