News April 7, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டு… அமைச்சர் ரகுபதி மறுப்பு!

டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
காலை உடற்பயிற்சியின் நன்மைகள்

காலை உடற்பயிற்சி உங்களது நாளை எப்படி மாற்றும் என்று தெரியுமா? காலை நேரம் தனித்துவம் கொண்டது. சுறுசுறுப்பு, மன தெளிவு, ஞாபக சக்தி ஆகியவற்றை அதிகரிக்கிறது. உற்சாகமான நாளை அனுபவிக்க, காலை நேர உடற்பயிற்சியின் நன்மைகள் என்னவென்று, மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க
News November 8, 2025
அனைவருக்கும் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம்

25 வயதுக்கு மேற்பட்டவர்களும் கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. முன்னதாக 18-25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று அறிவித்திருந்தது. 5ஜி பிளான் வைத்திருப்பவர்கள் My Jio செயலி பயன்படுத்தி இதை கிளெய்ம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ₹35,100 மதிப்பிலான திட்டங்களை 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
News November 8, 2025
பிஹார் மக்களை திமுக இழிவுபடுத்தியது: அமித் ஷா

பிஹார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு திமுக இழிவுபடுத்தியதாக கூறி அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார். தனக்கு பிடித்தமான CM என்று ஸ்டாலினை தேஜஸ்வி குறிப்பிட்டதாக பேசிய அமித்ஷா , அவரது கட்சியான திமுக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதாகவும், ராமர் கோவில் கட்டும் திட்டத்தை எதிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, TN-ல் பிஹாரிகளை திமுகவினர் துன்புறுத்துவதாக PM மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


