News November 3, 2025
EPS சிறை செல்ல திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆசை: TTV

கோடநாடு வழக்கில் EPS-ஐ கைது செய்ய திண்டுக்கல் சீனிவாசன் விரும்புவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் EPS தான் A1 என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், உண்மையாகவே குற்றத்தை நிரூப்பித்துவிட்டு EPS-யை கைது செய்யுங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில், EPS உடன் இருப்பவர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும், EPS-ன் வீழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் TTV கூறியுள்ளார்.
Similar News
News November 3, 2025
‘இபிஎஸ்-க்கு நோபல் பரிசு’

தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை கொண்டுவர EPS முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஜனநாயகத்தை வளர்க்க அவர் பாடுபட்டு வருகிறார் என்றும் இதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார். முன்னதாக, துரோகத்துக்கான நோபல் பரிசு EPS-க்கு கொடுக்கவேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதை பற்றி உங்கள் கருத்து?
News November 3, 2025
இந்தியாவின் அண்டை நாடுகள் அணு ஆயுத சோதனை

சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு, அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதை வெளிப்படையாக அறிவித்ததை நியாயப்படுத்தியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தான் குறுக்கிடவில்லை என்றால் பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
‘இரவு 12 மணி’: மம்தாவை வறுத்தெடுத்த பாஜக

மே.வங்க வன்கொடுமை சம்பவத்தின் போது, இரவு 8 மணிக்கு மேல் மாணவிகளை வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. “யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், நம் வீராங்கனைகள் இரவு 12 மணி வரை விளையாடினார்களே!” என்று X-ல் பதிவிட்டுள்ளது.


