News October 16, 2025
சொந்த பணத்தை எடுக்க 3 ஆண்டுகள் காத்திருப்பா?

<<18018181>>EPFO<<>> புதிய விதிகளை திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஓய்வு பெறும் நேரத்தில் கூட சொந்த பணத்தை எடுக்க 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், மிடில் கிளாஸ் மக்களின் பணத்தை நிறுத்தி, தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்வதா எனவும் சாடியுள்ளன. ஆனால், ஊழியர்களின் சமூக பாதுகாப்பு நலன்களுக்காகவே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 16, 2025
திமுகவுக்கு போட்டியாக மாறும் தவெக?

கரூர் துயரத்துக்கு பின் மக்கள் மத்தியில் தவெகவுக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள திமுக ரகசிய சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சர்வேயில், வரும் தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகளை பெறுவார் என தெரியவந்துள்ளதாம். அத்துடன், 2029, 2031 தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் போட்டியாளராக விஜய்யின் தவெக உருவெடுக்கும் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
News October 16, 2025
கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 16, 2025
KKR அணியின் கேப்டனாகிறாரா KL ராகுல்?

2024-ல் சாம்பியன் பட்டம் வென்ற KKR, 2025 சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், 2026-ல் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ள KKR, கேப்டனாக KL ராகுலை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025 சீசனில் 539 ரன்களை குவித்து அசத்திய KL ராகுல், ஓப்பனராகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பார் என்பதால், அவரை அணியில் சேர்க்க, டெல்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.