News August 8, 2024

நாளை முதல் காரையாறு கோவிலுக்கு அனுமதி

image

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நேற்றும், இன்றும் கோவில் வளாக பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு வனத்துறை சார்பில் அனுமதிக்கப்படுவதாக இன்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 20, 2025

நெல்லையில் கூட்டுறவு அமைச்சர் வழங்கிய கடன் தொகை

image

பாளை நேருஜி கலையரங்கத்தில் இன்று கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரிய கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கிய நிலையில் மொத்தம் எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிர் கடன் உள்பட மொத்தம் 12170 உறுப்பினர்களுக்கு 107.71 லட்சம் ரூபாயில் கடன் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

News November 20, 2025

பாளையங்கோட்டை வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

மாநகராட்சி ஆணையாளரும் பாளை சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலருமான மோனிகா ராணா விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2025 தொடர்பாக பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் திருப்பி அழிப்பதற்கு வசதியாக வாக்கு சாவடி நிலங்களில் 22, 23ஆம் தேதி காலை 8:00 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். *ஷேர்

News November 20, 2025

நெல்லை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!