News April 13, 2024
விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத் தொகை

தகுதி இருந்தும் விடுபட்ட மகளிருக்கு அடுத்த 4 அல்லது 5 மாதங்களில், உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் என உதயநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மைதான் எனக் கூறினார். மேலும், விடுபட்டவர்களை கண்டறிந்து, தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
Similar News
News July 11, 2025
செல்போனில் சிக்னல் பிரச்னையா? இத பண்ணுங்க

◆போனில் ரீசண்ட் Software அப்டேட் செய்திருக்கோமா என செக் பண்ணுங்க
◆நெட்வொர்க் Switch: போனில் செட்டிங்ஸ்-> மொபைல் நெட்வொர்க்-> SIM Management-> Switch data connection during calls-ஐ தேர்ந்தெடுக்கவும்
◆சிம் கார்டை எடுத்து கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் போனில் போட்டு முயற்சித்து பார்க்கவும்
◆Aeroplane Mode-ஐ OFF செய்து, சிறிது நேரத்தில் ஆன் செய்யவும்
◆போனை ஒருமுறை ‘Restart’ செஞ்சி பாருங்க.
News July 11, 2025
நாடு திரும்பிய PM மோடி.. விருதுகள் பட்டியல்!

8 நாள்கள் அரசுமுறை பயணமாக 5 நாடுகளுக்கு சென்ற PM மோடி நாடு திரும்பினார். கானாவின், ‘தி ஆஃபீஸர் ஆஃப் தி ஆர்டர் தி ஸ்டார் ஆஃப் கானா’, பிரேஸிலின் ‘கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’, நமீபியாவின் ‘தி ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஆன்ஷியன்ட் வெல்விட்ஸியா மிராபிலிஸ்’, டிரினிடாட்டின் ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்- டொபகோ’ ஆகிய உயரிய விருதுகளுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
News July 11, 2025
₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.