News November 29, 2024

மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: அண்ணாமலை

image

சட்டம் ஒழுங்கை காக்க முடியாத திமுக அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் தாய், தந்தை, மகன் கொலையுற்ற செய்தியறிந்து வேதனையடைந்ததாகக் கூறிய அவர், கடந்த ஆண்டும் பல்லடத்தில், இதே போன்று சம்பவம் நடந்ததை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News April 26, 2025

கடைசி இடத்தில் இருக்கும் ஃபீல்.. சேவாக் கருத்து

image

புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை CSK வீரர்கள் உணர்வார்கள் என சேவாக் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் CSK பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், CSK 10-வது இடத்தைப் பிடிக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். CSK-ன் இந்த மோசமான ஆட்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News April 26, 2025

கார் குண்டுவெடிப்பு.. ரஷ்ய ராணுவ தளபதி பலி

image

ரஷ்ய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக், கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். மாஸ்கோ அருகே குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் எந்த தகவலும் கூறப்படவில்லை. உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 26, 2025

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு.. மக்கள் ஏமாற்றம்

image

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்திற்கு பிப். வரை 1.71 கோடி கிலோ கோதுமையை மத்திய அரசு வழங்கியது. தற்போது அதை 85.76 லட்சம் கிலோவாக குறைத்துள்ளது. இதனால் 1,000 அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளுக்கு கூட வெறும் 300 கிலோ கோதுமையே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோதுமை கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

error: Content is protected !!