News February 26, 2025
ENGக்கு 326 ரன்கள் இலக்கு

ICC சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ENG-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த AFG 50 ஓவரில் 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 177 (6 SIX, 12 FOUR) ரன்கள் விளாசினார். ENG அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர்ச்சர் 3 விக்கெட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் யார் தோல்வி அடைந்தாலும் வெளியேற வேண்டும் என்பதால், இங்கி., அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 26, 2025
‘L2: எம்புரான்’ போஸ்டர் வெளியீடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லாலின் ‘L2: எம்புரான்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் ஸ்டீபன் நெடும்பள்ளி குறித்த கதை வெளியான நிலையில், 2வது பாகம் குரேஷி அபிராம் குறித்த கதையாக அமைந்துள்ளது.
News February 26, 2025
தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: திருமா

விஜய் தேர்தலை சந்தித்தால்தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரியவரும் என திருமாவளவன் கூறியுள்ளார். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும், அவர்களால் பெரியளவில் சாதிக்க முடிவதில்லை என குறிப்பிட்ட அவர், சினிமா புகழை வைத்து எல்லாவற்றையும் ஓரங்கட்டி விட முடியாது என்றார். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதாகவும், அவர்களை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
News February 26, 2025
சிவராத்திரி: இன்று இரவு இதை செய்தால் குபேரன் ஆகலாம்

*சிவ லிங்கத்திற்கு ருத்ர அபிஷேகத்துடன் தயிர், கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும் * தேன் மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் *சிவலிங்கத்திற்கு தண்ணீரில் தேன் கலந்த அபிஷேகம் செய்தால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் *வில்வம், சந்தனம் படைத்து வழிபட்டாலோ, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தாலோ ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் உடனே நிறைவேறும்.