News June 28, 2024
இந்திய வீரர்களை புகழ்ந்த ENG கேப்டன்

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பவுலிங் அட்டாக் தான் தங்களுடைய தோல்விக்கு காரணம் என ENG கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார். சவாலான சூழலிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பேசிய அவர், இந்தியா இந்த வெற்றிக்கு முழுமையாகத் தகுதியுடையது என கூறியுள்ளார். மேலும், 20 – 25 ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டதாகவும், 2022 அரையிறுதிப் போட்டியில் இருந்த நிலைமை மாறிவிட்டதாகவும் கூறினார்.
Similar News
News November 27, 2025
பசுக்களுக்கும் Best Friends இருக்கு.. தெரியுமா?

மனிதர்களைப் போலவே பசுக்களுக்கும் சக மாடுகளுடன் நெருங்கிய நட்பு இருக்கிறது என நார்த்தாம்ப்டன் பல்கலை., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பசுவை அதன் Friend-யிடம் இருந்து பிரித்துவைக்கும் போது அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி, முரட்டுத் தனமாக நடக்கிறதாம். மீண்டும் அதன் Friend-வுடன் சேர்த்து வைக்கும்போது ஒருவித அமைதியை அவை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 27, 2025
5 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: அமுதா

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ புயலால் காற்று மற்றும் மழை அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் வரும் 30-ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 27, 2025
BREAKING: செங்கோட்டையனுக்கு பதவி.. விஜய் அறிவித்தார்

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.


