News March 16, 2024
அமலாக்கத்துறை 7 நாள்கள் விசாரிக்க அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை, மார்ச் 23 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று மாலை ED அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தனது உடல்நிலையை பரிசீலிக்க வேண்டும் என கவிதா தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Similar News
News July 5, 2025
வேலைவாய்ப்பு இலக்கை முந்தி TNPSC சாதனை..

ஜனவரி 2026-க்குள் 17,595 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17,702 இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 7 மாதங்களுக்கு முன்பாகவே நிர்ணயித்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது TNPSC. மேலும் கூடுதலாக 2500+ இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அது 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.
News July 5, 2025
சீனாவை சீண்டிய கிரண் ரிஜிஜு.. என்ன ஆச்சு?

தலாய் லாமாவின் வாரிசு நியமனம் அவரது விருப்பப்படி அமைய வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திபெத் விவகாரங்களில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், இருதரப்பு உறவுகளைப் பாதிக்காதவாறு தனது நிலைப்பாட்டை மதிக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஓ நிங் வலியுறுத்தியுள்ளார்.
News July 5, 2025
அடுத்தடுத்து டக் அவுட் ஆகிய 6 பேர்… அசத்தல் சிராஜ்!

தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட், ஆலி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ், பஷீர், பிரைடன் ஆகியோர் டக் அவுட்டும் ஆக இங்கிலாந்து அணி சுருண்டது. இந்த வகையில் 6 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.