News March 16, 2024
அமலாக்கத்துறை 7 நாள்கள் விசாரிக்க அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை, மார்ச் 23 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று மாலை ED அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தனது உடல்நிலையை பரிசீலிக்க வேண்டும் என கவிதா தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Similar News
News October 19, 2025
பிரபல நடிகை அம்மா ஆனார் ❤️❤️

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. டெல்லி தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, குழந்தை பிறந்த செய்தியை கணவரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு மண வாழ்க்கைக்குள் நுழைந்த இந்த தம்பதி, தற்போது பெற்றோர் என்ற பொறுப்புக்குள் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
News October 19, 2025
தீபாவளியில் இந்த தவறுகளை பண்ணாதீங்க!

இருளின் மீது ஒளியும், அறியாமையின் மீது அறிவும் படரும் பண்டிகையே தீபாவளி. அன்று இந்த தவறுகளை செய்யக் கூடாது: *வீட்டில் எந்த இடத்திலும் இருள் சூழக் கூடாது *தீபாவளிக்கு அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து முதியவர்கள், உடல்நலம் பாதித்தவர்களையும் தொந்தரவு செய்ய வேண்டாம் *அதேபோல் எந்த விலங்கையும், குறிப்பாக பட்டாசு சத்தத்தால் பயப்படும் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது.
News October 19, 2025
ரஜினி வழியில் விஜய்?

நான் தான் ஹீரோ என நானே கூறிக்கொண்டே இருக்கக்கூடாது, என்னை பற்றி பிறர் பேசினாலே நான் ஹீரோ என ரஜினி கூறியிருப்பார். விஜய் வீட்டுக்குள்ளேயே உள்ள நிலையில், அவரை பற்றி அரசியல் தலைவர்கள், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரை அனைவரும் பேசுகின்றனர். சினிமாவில் ஹீரோவாக ஜொலிப்பதை போலவே, அரசியலிலும் அவ்வப்போது வெளியே வந்தால் போதும் ஜெயித்துவிடலாம் என்பது முடியாத ஒன்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.