News January 23, 2025
திமுக அரசின் சதிக்கு முற்றுப்புள்ளி: இபிஎஸ்

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் சதி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற திமுக அரசு முயற்சித்தது. ஆனால், அது தற்போது நிறைவேறவில்லை. டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன் என்றார். முன்னதாக திமுக அரசின் முயற்சியால் டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
Similar News
News August 21, 2025
பொதுச்செயலாளர் பதவி வழக்கு.. EPSக்கு பின்னடைவு!

அதிமுக பொதுச் செயலாளராக EPS தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்குக்கு தடை விதித்த உத்தரவை ஐகோர்ட் வாபஸ் வாங்கியுள்ளது. EPS-ன் மனுவை ஏற்கெனவே உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது ஐகோர்ட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
News August 21, 2025
செல்போன் ரீசார்ஜ்… அடுத்த அதிர்ச்சி கொடுத்த ஜியோ!

ஜியோ, தனது பயனாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அண்மையில் ₹249 ரிசார்ஜ் பிளானை நிறுத்தியதை போலவே, தற்போது ₹799 ரீசார்ஜ் (84 நாள் Validity) பிளானை நிறுத்தியுள்ளது. இதே பிளான், JioSaavn Pro சப்ஸ்கிரிப்ஷனுடன், தற்போது ₹899-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் ரிசார்ஜ் கட்டணங்களும் 15- 20% வரை உயரும் எனக் கூறப்படுகிறது.
News August 21, 2025
பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு

PM, CM தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவியில் இருந்து நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால், அவர்களது பதவி பறிக்கப்படுவது சரிதானே; அப்போதுதான் ஒழுங்கு இருக்கும், இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்த்திருத்தங்கள் தேவை எனவும் கூறியுள்ளார்.