News August 7, 2025

திருப்பூர் SSI கொலை வழக்கில் அதிகாலையில் என்கவுன்டர்

image

திருப்பூர் உடுமலையில் SSI சண்முகவேல் கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்கவுன்டரில் உயிரிழந்தார். தந்தை – மகன் நேற்று சரணடைந்த நிலையில், எஞ்சியிருந்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அதிகாலையில் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, அவர் போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதில் மணிகண்டன் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 9, 2025

பணம் கொடுத்து ட்ரோல் செய்கிறார்கள்: ரஷ்மிகா

image

நடிகை ரஷ்மிகா மந்தனா, தனக்கு எதிராக டிரோல் செய்வதற்கு பணம் கொடுக்கப்படுகிறது என பகீர் புகார் தெரிவித்துள்ளார். சிலர் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும், இது தன்னை வளரவிடாமல் தடுக்கும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு காட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, அமைதியாக இருங்கள் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

News August 9, 2025

₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு விளக்கம்

image

ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

ராகுல் MP பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

image

லோக்சபா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக ராகுல் அண்மையில் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த EC அவரிடமுள்ள ஆதாரங்களை உறுதிமொழி பத்திரங்களாக வழங்கும்படி தெரிவித்த நிலையில், ராகுல் அதற்கு மறுத்துவிட்டார். இந்நிலையில், உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யாத ராகுல், EC மீது கேள்வி எழுப்பும் சோனியா, பிரியங்கா ஆகியோர் MP பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!