News December 4, 2024
இரவோடு இரவாக எமர்ஜென்சி அமலுக்கு வந்தது!

தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தியுள்ளார். தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வட கொரிய கம்யூ. படைகளின் துணையுடன் எதிர்க்கட்சிகள் தென் கொரியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த சதி செய்கின்றனர். தேசத்தின் நிலைத்தன்மை, சுதந்திரம் & பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 15, 2025
துரோகம் செய்யவில்லை: ஜி.கே.மணி

ஜி.கே.மணி துரோகம் செய்ததாக <<18512558>>அன்புமணி <<>>குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். துரோகி எனக் கூறியது வேதனையாக உள்ளதென குறிப்பிட்ட அவர், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க தானே பரிந்துரைந்ததாக கூறியுள்ளார். ராமதாஸ் வேதனையில் உள்ளதாகவும், இருவரும் அமர்ந்து பேசினாலே தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News December 15, 2025
நடிகர் ரெய்னர் மனைவியுடன் சடலமாக மீட்பு!

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குநருமான ராப் ரெய்னர் (78), அவரது மனைவி மிச்செல் சிங்கர் ரெய்னர் (68) கொலை செய்யப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அவர்களது வீட்டில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுள்ளனர். கொலைக்கு அவர்களது மகனே காரணம் என சர்வதேச ஊடகங்கள் வெளியிடுகின்றன. நடிகராக 2 Emmy விருதுகளை வென்றுள்ள ராப், ‘When harry mets Sally’, ‘Misery’ போன்ற வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார்.
News December 15, 2025
சோஷியல் மீடியாவில் ஆதார் போட்டோ போடுறீங்களா?

யாரும் சோஷியல் மீடியாவில் தங்களது ஆதார் அட்டையின் போட்டோவை பதிவிட வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது. நிதி மோசடிகள், அடையாள திருட்டுகள் போன்றவற்றை தவிர்க்க, இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் இருந்தால், சைபர் கிரைம் Helpline 1930, UIDAI ஹெல்ப்லைன் 1947 அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம். SHARE IT.


