News December 4, 2024
இரவோடு இரவாக எமர்ஜென்சி அமலுக்கு வந்தது!

தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தியுள்ளார். தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வட கொரிய கம்யூ. படைகளின் துணையுடன் எதிர்க்கட்சிகள் தென் கொரியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த சதி செய்கின்றனர். தேசத்தின் நிலைத்தன்மை, சுதந்திரம் & பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 22, 2025
பியூஷ் கோயலுக்கு நாளை விருந்தளிக்கும் இபிஎஸ்

தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு EPS தனது வீட்டில் விருந்து அளிக்க உள்ளார். 2026 பேரவை தேர்தல் கூட்டணி, பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயல், EPS இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். 2024 தேர்தலுக்கு பிறகு NDA கூட்டணியில் மீண்டும் இணைந்த EPS, தனது வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து அளித்திருந்தார். நாளை நடைபெறவுள்ள விருந்தில் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படவுள்ளதாம்.
News December 22, 2025
BREAKING: ஜன.6-ம் தேதி ஸ்டிரைக் அறிவிப்பு

பழைய ஓய்வூதியம் தொடர்பாக அரசு ஊழியர்களுடன், அரசு சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என ஜாக்டோ ஜியோ தலைவர் அமிர்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ஜன. 6-ம் தேதி முதல் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 22, 2025
கோலாகலமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எங்கு தெரியுமா?

கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, கேக், கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் ஆகியவைதான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை, இந்தியாவிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நம்நாட்டில் எங்கெல்லாம் களைகட்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


