News May 24, 2024
AI குறித்து எலான் மஸ்க் அச்சம்

டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாரிஸில் நடந்த விவா டெக் 2024 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற அவர், AI காரணமாக வருங்காலத்தில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என எச்சரித்தார். கணினிகள் மற்றும் ரோபோக்களால் மனிதர்களை விட எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிந்தால் நமது வாழ்க்கைக்கான அர்த்தம் இருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Similar News
News March 30, 2026
BREAKING: பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசி முடித்த உடனேயே, வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் கிளம்பி போய்விட்டார். போலீசாரின் பாதுகாப்பு குறைபாடே பிரசாரம் ரத்து செய்யப்பட காரணம் என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
News March 30, 2026
ஈரான் போர்.. முதல் தமிழர் மரணம் PHOTO

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் குவைத்தில் தமிழர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். ஈரான் தாக்குதலில் அவர் உயிரிழந்த செய்தி அறிந்து குடும்பத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்குமாறும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 30, 2026
சீன CCTV-களுக்கு தடை… ஆக்ஷனில் மத்திய அரசு

ஏப்ரல் 1 முதல் Hikvision, TP-Link, Dahua போன்ற சீன CCTV கேமராக்கள் மற்றும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. நாட்டில் விற்கப்படும் CCTV தயாரிப்புகளுக்கு கண்டிப்பாக அனுமதி(STQC சான்றிதழ்) பெற வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இண்டர்நெட்டுடன் சேர்ந்து இயங்கும் இந்த கேமராக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே இதற்கு காரணம். நாட்டில் 3-ல் 1 சீன CCTV ஆக உள்ளது.


