News April 2, 2025
இனி மாதம் ஒருமுறை மின்கட்டணம்

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வரவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளுக்கு தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால், EB BILL அதிகமாக கட்டவேண்டிய சூழல் எழுகிறது. இந்நிலையில், 2021 திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் மின் நுகர்வை கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
Similar News
News December 2, 2025
டிசம்பர் 2: வரலாற்றில் இன்று

*1911–தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைந்த நாள். *1912 – திரைப்பட தயாரிப்பாளர் நாகிரெட்டி பிறந்தநாள். *1933–நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா மறைந்த நாள். *1960–நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள். *1963–இ-மெயிலை கண்டுபிடித்த சிவா ஐயாதுரை பிறந்தநாள். *1963–நடிகர் நெப்போலியன் பிறந்தநாள். *1988–பெனசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். *2016–அரசியல்வாதி கோ.சி.மணி மறைந்த நாள்.
News December 2, 2025
85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி.. சீமான் காட்டம்

முதுநிலை ஆசிரியர் தேர்வில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததுதான், 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்வெழுதிய பல இளைஞர்கள் தமிழ் சரிவர தெரியாமலேயே பட்டம் பெற்றது கொடுமை என்றும் அவர் கூறியுள்ளார். இதை சரிசெய்திட பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பாடத்தை கட்டாயம் கற்பித்து, தேர்வு நடத்துவதை அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது

11 பேர் உயிரிழந்த டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளதாக NIA தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் பல டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், அல் பலா பல்கலை. நிறுவனர் ஜவாத் அகமதை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


