News April 2, 2025
இனி மாதம் ஒருமுறை மின்கட்டணம்

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வரவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளுக்கு தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால், EB BILL அதிகமாக கட்டவேண்டிய சூழல் எழுகிறது. இந்நிலையில், 2021 திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாதந்தோறும் மின் நுகர்வை கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
Similar News
News November 21, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு

கரூர் அசம்பாவிதத்தை போல் இனி எப்போதும் நடந்துவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். இந்நிலையில், தவெகவில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கான பயிற்சி, கடந்த சில நாள்களாக சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் விஜய் மீண்டும் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், நவ.23-ல் பயிற்சி பெறும் தொண்டரணிக்கு விஜய் நேரடியாக அறிவுரை வழங்கவுள்ளாராம்.
News November 21, 2025
தேஜஸ் விபத்து சதியாக இருந்தால்… யாருக்கு லாபம்?

<<18350384>>தேஜஸ் விமான விபத்து<<>> சதியாக இருந்தால், அதற்கு இவை பின்னணி காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்: *சில நாடுகளின் போர் விமான பிசினஸ் பாதிக்கப்படும் *அவர்களுக்கு பிடிக்காத நாடுகள் தேஜஸை வாங்குவதை விரும்பவில்லை *இந்தியாவின் தன்னம்பிக்கையை உடைப்பது *உள்நாட்டில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி குழப்பம் விளைவிப்பது *இந்தியாவின் ஆயுதங்கள், பாதுகாப்புத் துறை மீதான நம்பிக்கையை உடைப்பது.
News November 21, 2025
அழுகிய மனைவி உடல்.. கொடூர கணவன் சிக்கினான்

குஜராத், பவ்நகரில் நடந்துள்ள கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான கம்பலா, சக பெண் அலுவலருடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்த அவரது மனைவி, மகள்(13), மகன்(9) திடீரென காணாமல் போயுள்ளனர். போலீஸின் தீவிர விசாரணையில் கம்பலா வீட்டருகிலேயே 3 பேரின் அழுகிய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கொலை செய்ததாக கம்பலா கைது செய்யப்பட்டுள்ளார்.


