News March 27, 2024

தேர்தல் பத்திரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல்

image

தேர்தல் பத்திர விவகாரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பாஜக அரசுக்கு இது மிகப்பெரிய தண்டனையாக அமையும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்னை மத்திய அரசைக் கடந்து மக்களிடம் அதிவேகமாக சென்றடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 20, 2026

அமைச்சர் KN நேருவுக்கு புதிய சிக்கல்!

image

அமைச்சர் <<18786820>>KN நேரு<<>> மீது ஏற்கனவே டெண்டர், வேலைநியமன ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக ₹1 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி ED, TN அரசு மற்றும் DGP-யிடம் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுமார் 340 அதிகாரிகளின் இடமாற்றத்தில், ₹365 கோடி வரை பணமோசடி நடந்துள்ளதாக ஆதாரங்களை இணைத்துள்ள ED, உடனே FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.

News January 20, 2026

அவையில் கவர்னர் அவமதிக்கப்பட்டாரா?

image

பேரவையில் கவர்னர் ரவியின் மைக்கை பலமுறை ஆப் செய்து அவமதித்ததாக மக்கள் பவன் கூறியுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் TN அரசு தயாரித்த அறிக்கையில் உள்ளதாக கூறிய மக்கள் பவன், TN அரசு ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், முதலீடுகளில் TN 4-வதில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2026

மக்கள் நாயகன் காலமானார்

image

இயற்கை ஆர்வலர் ராதேஷ்யாம் கோயங்கா(84) உடல்நலக்குறைவால் காலமானார். அசாமை சேர்ந்த இவருக்கு மரங்களின் நண்பன் என்ற பெயரும் உண்டு. திப்ருகர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து பசுமை புரட்சி செய்தார். தொழில் பொறுப்புகளை மகனிடம் ஒப்படைத்துவிட்டு,’கிரீன் திப்ருகர்’ உருவாக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரது மறைவால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

error: Content is protected !!