News March 27, 2024
தேர்தல் பத்திரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல்

தேர்தல் பத்திர விவகாரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பாஜக அரசுக்கு இது மிகப்பெரிய தண்டனையாக அமையும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்னை மத்திய அரசைக் கடந்து மக்களிடம் அதிவேகமாக சென்றடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
ரயில் டிக்கெட் தள்ளுபடி.. முக்கிய அறிவிப்பு வெளியானது

பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் டிக்கெட் புக்கிங்கில் 3% வரை தள்ளுபடி பெறலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. RailOne ஆப்பில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கே இந்த சலுகை கிடைக்கும். பெரும்பாலோர் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். RailOne ஆப்பின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE.
News January 9, 2026
BREAKING: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28-ம் தேதி தொடங்கி ஏப்.2-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தாண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 9, 2026
BREAKING: சென்சார் போர்டுக்கு ஸ்டாலின் கண்டனம்

CM ஸ்டாலின் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்சார் வழங்கப்படாததால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. அதேபோல், ‘பராசக்தி’ படத்தில் தீ பரவட்டும், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட முக்கிய வசனங்களுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


