News March 27, 2024
தேர்தல் பத்திரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல்

தேர்தல் பத்திர விவகாரம் உலகளவிலான மிகப்பெரிய ஊழல் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் பாஜக அரசுக்கு இது மிகப்பெரிய தண்டனையாக அமையும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்னை மத்திய அரசைக் கடந்து மக்களிடம் அதிவேகமாக சென்றடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2025
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஹர்லீன் தியோல்

உலகக்கோப்பை வென்ற மகளிர் அணியில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தவர் ஹர்லீன் தியோல். இவர் மைதானத்தில் மட்டும் அல்ல இன்ஸ்டாகிராமிலும் அசத்தி வருகிறார். நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இவர் போடும் போட்டோஸ்களுக்கு லைக்குகள் குவிகின்றன. PM மோடியிடமே உங்கள் பிராகாசத்துக்கு என்ன காரணம் என கேட்டு, வெட்கப்பட வைத்த ஹர்லீனின் அழகின் ரகசியம் என்ன என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
News November 19, 2025
2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: திருமாவளவன்

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக திமுகவிடம் வைக்கவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். அதேசமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 19, 2025
விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி வழக்கும் PM மோடி

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறும் வேளான் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து பி.எம். கிசான் திட்டத்தின், 21-வது தவணையான ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்குகிறார். இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.


