News March 16, 2024
ELECTORAL BONDS : உண்மையை வெளியிட்ட பத்திரிகையாளர்

எஸ்.பி.ஐ., வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ED சோதனை நடந்த பெரிய நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக கட்சிகளுக்கு வழங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த உண்மை வெளியாக காரணமாக இருந்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இதழியல் துறையில் புலிட்சர் விருதுப் பெற்ற அவரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
10-வது போதும், மத்திய அரசு வேலை, ₹56,900 சம்பளம்!

Intelligence Bureau Recruitment மத்திய உளவுத்துறையில் 362 Multi Tasking Staff பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹18,000 முதல் ₹56,900 வரை தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு: 25 வயது. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in -ல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: டிச.14-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE.
News November 23, 2025
திமுகவின் சிறப்பு திட்டங்களால் வெற்றி உறுதி: வைகோ

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். மக்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது என்பதை நிச்சயம் மக்கள் புரிந்துக் கொள்வார்கள். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றிபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News November 23, 2025
கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.


