News April 17, 2024
தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாக நடக்கும்

மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்கள் 100% வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் தவறால் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 26, 2026
கனமழை: நாளை 12 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், தி.மலை, நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டையில் இன்றிரவு மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. காலையில் மழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படலாம். இல்லாவிடில், குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றுடன் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி செல்லுங்கள். SHARE IT.
News January 26, 2026
OPS அவசரப்பட்டிருக்க வேண்டாம்.. TTV வருத்தம்

OPS முதலமைச்சர் வாய்ப்பை தர்மயுத்தத்தால் தவறவிட்டதாக தேனியில் பேட்டியளித்த TTV தினகரன் கூறியுள்ளார். NDA கூட்டணியில் சேர OPS-க்கு அழைப்பு விடுத்துள்ள தினகரன், யார் பேச்சையோ கேட்டு செய்த தர்மயுத்தத்தை தொடங்காமல், ஒருவாரம் பொறுத்திருந்தால் அவர் மீண்டும் முதலமைச்சராகி இருக்கலாம். அவரது வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு. எனவே, நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.
News January 26, 2026
NDA கூட்டணி BLACKMAIL கூட்டணி: மு.க.ஸ்டாலின்

அதிமுக -பாஜக கூட்டணி கட்டாயத்தால் உருவான BLACKMAIL கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, வழக்குகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ள சுயநலக் கூட்டணியை EPS உருவாக்கியுள்ளதாக சாடிய அவர், 2019, 2021 தேர்தல்களில் ஒன்றாக தோற்றுப் போனவர்கள், புதிய கெட்டப்பை போட்டுக்கொண்டு NDA கூட்டணி என்கிறார்கள். கெட்டப்பை மாற்றினாலும் தமிழ்நாட்டில் கெட் அவுட் தான் என்றார்.


