News August 6, 2025

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல்

image

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்ட பின் வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா். ரம்ஜானுக்கு முன்னர் தேர்தலை முடிக்கும் நோக்கில் வங்கதேச அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

Similar News

News August 6, 2025

வெள்ளி விலை உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000ஆக இருந்த நிலையில், 2 நாளில் ₹3,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News August 6, 2025

SI குடும்பத்திற்கு ஒரு கோடி நிதியுதவி: ஸ்டாலின்

image

மடத்துக்குளம் அதிமுக MLA-வின் தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட SI சண்முகசுந்தரத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹30 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News August 6, 2025

பாஜகவுக்கு தான் அடிமை இல்லை: EPS

image

பாஜகவுக்கு தான் அடிமை இல்லை எனவும் கூட்டணி வேறு கொள்கை வேறு எனவும் EPS திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக, அதிமுக இடையே எந்த பிரச்சனை இல்லை என்றும் விளக்கியுள்ளார். குறைகளே கண்டறிய முடியாத அளவுக்கு 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!