News August 16, 2024
தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியில் தேர்தல்

சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்தான பின், ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 11,838 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
Similar News
News August 18, 2025
நான் குடிப்பேன்.. ஒப்புக் கொண்ட தனுஷ் பட ஹீரோயின்

தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தினமும் குடிப்பதில்லை, மன அழுத்தம் (அ) பதட்டம் ஏற்படும்போது மட்டுமே குடிப்பதாகவும் காரணம் கூறியுள்ளார். தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், விஜய் சேதுபதியுடன் ஒரு படம், Benz படங்களில் நடித்து வருகிறார்.
News August 18, 2025
பெண்களுக்கு ₹25 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெண்கள் ₹25 லட்சம் வரை தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, BC, MBC, சீர் மரபினர்(DNC) உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. ₹1.25 லட்சம் வரை வட்டி விகிதம் 7%, ₹1.25 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வட்டி விகிதம் 8% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாகும். SHARE IT.
News August 18, 2025
டெல்லியில் PM மோடி – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

NDA-வில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள PM மோடி, நீண்ட ஆண்டுகால பொது சேவை மற்றும் அனுபவங்களை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.