News March 17, 2024

கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

image

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Similar News

News November 17, 2025

புதுவை: பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர்கள் கைது

image

திருபுவனை போலீசார் ரோந்து சென்றபோது, மதகடிப்பட்டு பகுதியில் டியூசன் சென்டர் ஒன்றின் எதிரே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதில் கடலூர் கமலேஷ், விஷ்ணு ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 17, 2025

புதுவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

image

புதுவை சாரம் தென்றல் நகரில் பொதுமக்களை கத்தியை காட்டி ஒரு கும்பல் மிரட்டுவதாக கோரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது. அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுவையைச் சேர்ந்த சக்தி என்ற சத்திய மூர்த்தி, நைனார் மண்டபம் மாதேஷ், உருளையன்பேட்டை வேல்முருகன் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 17, 2025

புதுவையில் 354 அரசு பணியிடங்கள் அறிவிப்பு

image

புதுவையில் காலியாக உள்ள 354 அரசு பணியிடங்களுக்கு நாளை (நவ.18) மதியம் 12 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 14-ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரியில் முதல் முறையாக இந்த அரசு பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த போட்டி தேர்வுக்கு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!