News March 17, 2024
கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Similar News
News December 5, 2025
புதுவை: மது குடித்த ஆசிரியர் உயிரிழப்பு

புதுவை கந்தப்ப முதலியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் சார்லஸ் எடிசன்(57). இவரது மனைவி ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். சார்லஸ் எடிசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த அவர் கருவடிக்குப்பம் அருகே உள்ள மதுபானக்கடையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
கடலோர காவல்படை கமாண்டர் புதுச்சேரி வருகை

புதுச்சேரி வந்திருந்த இந்திய கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் தந்த்விந்தர் சிங் சைனி நேற்று உப்பளம் துறைமுகத்தில் உள்ள கடலோர காவல் படை உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், தலைமை செயலர் சரத் சவசாள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். டிருதி. தசிலா, இந்திய கடலோர காவல்படை, காரைக்கால் கமாண்டர் சந்தோஸாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News December 5, 2025
புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.


