News March 17, 2024
கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Similar News
News November 20, 2025
பீகார் முதலமைச்சருக்கு புதுவை முதல்வர் வாழ்த்து

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், 10-வது முறையாக பீகார் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்க ளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பீகார் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை, செய்த சாதனைகள், மக்கள் சேவைகள் மீண்டும் தங்களின் தலைமையில் தொடர வேண்டும். புதுவை மக்கள் சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் வாழ்த்துகள் என்றார்.
News November 20, 2025
புதுச்சேரி: முதல்வருடன் கடலோர காவல்படை கமாண்டர்!

இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் DIG SS டஸிலா, மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமியை, சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் புதுச்சேரியில் இந்திய கடலோர காவல்படையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளுக்கான திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.
News November 20, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


