News March 17, 2024

கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

image

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Similar News

News December 13, 2025

புதுவை: முதியவரை தாக்கிய சிறுவர்கள்

image

வில்லியனுார், சேந்தநத்தத்தைச் சேர்ந்த முதியவர் வேலு என்பவர், வில்லியனுார் சென்று, ரயில்வே பாதை வழியாக நேற்று சென்ற போது, அவரை வழி மறித்த இரு சிறுவர்கள் அவரை சராமரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, சேந்தநத்தம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுவர்களை பிடித்து, அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

News December 13, 2025

புதுச்சேரியில் 120 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

image

புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிகள் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருந்ததால் அதன்படி 120 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

News December 13, 2025

புதுவை: மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை

image

புதுச்சேரி, ஊசுட்டேரியில் நேற்று பெலிகான் பறவை (கூழைக்கடா) ஒன்று மீன் வலையில் சிக்கி தண்ணீரில் தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் ஏரியில் மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் பறவையை மீட்டு, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை மருத்துவர் குமரன் பறவைக்கு சிகிச்சை அளித்தார்.

error: Content is protected !!