News March 28, 2024
238 முறை தோல்வி அடைந்த ‘தேர்தல் மன்னன்’

தமிழகத்தின் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன், மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை 238 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட அவர், அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் வெற்றி பெற வேண்டுமென்று போட்டியிடவில்லை. வெற்றி என்பது 2ஆம் பட்சம். ஆனால், என் கடைசி மூச்சு வரை போட்டியிட்டுக் கொண்டே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளாா்.
Similar News
News December 4, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி?

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக திமுக அரசை சாடும் அன்புமணி, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், தான் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க EPS-க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கான சமிக்ஞை ஆக கருதப்படுகிறது. எனினும் ராமதாஸுடனும் ADMK பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுகின்றன.
News December 4, 2025
‘டியூட்’ சர்ச்சை.. இழப்பீடு பெற்ற இளையராஜா

‘டியூட்’ படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் உள்ளிட்ட பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக மெட்ராஸ் HC-ல் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. இருதரப்பும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், டியூட்-ல் மீண்டும் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
News December 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.


