News October 26, 2024
இபிஎஸ்-க்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது – திமுக

இபிஎஸ் பேசுவது பற்றி எல்லாம் தாங்கள் கவலைப்படுவதில்லை என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும், அவரது சொந்த தொகுதியில் இருந்து மட்டும் 3,000 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 2026இல் அதிமுக ஆட்சியமைக்கும் என இபிஎஸ் கூறியிருந்தார்.
Similar News
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
News January 15, 2026
நாட்டை காக்கும் வீரர்களுக்கு சல்யூட்.. இந்திய ராணுவ தினம்!

இந்திய ராணுவ தினம் இன்று. தன்னலம் நீங்கி, உறவுகளை பிரிந்து, வெயில், பனி பாராது தாய் மண்ணை காக்க, பாடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவத்தின் மகத்துவத்தை நினைவுகூரும் நாள். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை கொடுக்கும் வீரர்களின் செயலை ‘தியாகம்’ என்ற ஒற்றை சொல்லில் அடக்கிவிடமுடியாது. அவர்களுக்காக ‘ஜெய்ஹிந்த்’ என கமெண்ட் செய்து உங்களது வீரவணக்கத்தை செலுத்துங்கள்.
News January 15, 2026
ஒற்றுமையை பிரதிபலிக்கும் பொங்கல்: PM மோடி

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையை காண்பது மகிழ்ச்சி. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இத்திருநாள் நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இப்பொங்கல், அனைவருக்கும் புதிய உற்சாகத்தை வழங்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.


