News November 22, 2024
ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.
Similar News
News December 13, 2025
விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு மறுப்பு

<<18488484>>விமான டிக்கெட்<<>> கட்டணங்களுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்க முடியாது என மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், பண்டிகை உள்ளிட்ட சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே டிக்கெட் கட்டணம் உயரும். இது தற்காலிகமானது தான். கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தால் தான் பல நிறுவனங்கள் உள்ளே வரும். அதனால் போட்டி அதிகரித்து மக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
மாரடைப்பு அபாயத்தை முன்பே கண்டறிய..

வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது. ஆனால், சில டெஸ்ட்களின் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே அறியலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. அதே நேரத்தில், மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
News December 13, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

அதிமுக செயற்குழு & பொதுக்குழுவிற்கு பிறகு, மாற்றுக்கட்சியினர் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை EPS தீவிரப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில், அமமுகவின் ஐடி விங் மாநில துணைச் செயலாளர் இளையராஜா, திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் டோல்கேட் ரெமோ, திருச்சி மாவட்ட கழக அவைத்தலைவர் ராமு, மாவட்ட மீனவரணி செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


