News November 22, 2024
ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.
Similar News
News December 15, 2025
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்

NDA கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் விருப்பம் மட்டுமே, அதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என TTV தினகரன் விளக்கமளித்துள்ளார். கூட்டணி குறித்து டிச.31-க்குள் முடிவெடுக்க நினைத்ததாகவும், ஆனால் தற்போது பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறினார். அண்மையில், <<18509410>>TTV தினகரனை சந்தித்து அண்ணாமலை<<>> பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.
News December 15, 2025
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தைகள் இறங்குமுகத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 347 புள்ளிகள் சரிந்து 84,919 புள்ளிகளிலும், நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 25,931 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களின் கவனம் <<18569494>>தங்கம்<<>>, வெள்ளியின் பக்கம் திரும்பியுள்ளதால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
News December 15, 2025
இரண்டரை ரூபாய் நோட்டு பாத்திருக்கீங்களா?

கைகளில் காசையே அதிகளவில் பார்க்காத இன்றைய UPI ஜெனரேஷனை கண்டிப்பாக இந்த செய்தி ஆச்சரியப்படுத்தும். அவ்வளவு ஏன், எட்டணா, நாலணா போன்றவற்றை பயன்படுத்தியவர்களும் இதை கண்டிருக்க மாட்டார்கள். 1918-ல் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு (2 ரூபாய் 8 அணா) புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அடுத்த 8 வருடங்களிலேயே இந்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டது. நீங்க நாலணா, எட்டணா யூஸ் பண்ணிருக்கீங்களா?


