News November 22, 2024

ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.

Similar News

News December 4, 2025

மத நம்பிக்கையை தடுப்பது நல்லிணக்கமா? கோர்ட்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் உத்தரவிற்கு எதிராக TN அரசின் மேல்முறையீடு வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதை விசாரித்த மதுரை கோர்ட், ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கமாகும் என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீபம் ஏற்றுவதை ஏன் ஒரு தரப்பு தடுக்க வேண்டும் என கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆலோசிக்க சென்றுள்ளனர்.

News December 4, 2025

பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

image

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 4, 2025

BREAKING: போஸ்டரை நீக்கினார் செங்கோட்டையன்

image

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து, நேற்று வெளியிட்ட பதிவை, செங்கோட்டையன் நீக்கியுள்ளார். குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் உடன் எம்ஜிஆர், ஜெ., புகைப்படமும் இருந்தது. இதனையடுத்து, தவெக கொள்கை தலைவர் ஜெ.,வா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது அரசியல் ரீதியாக சர்ச்சையானதை உணர்ந்த KAS, இன்று அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.

error: Content is protected !!