News November 22, 2024
ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.
Similar News
News December 11, 2025
ஒரு பெண்ணின் தலைவிதியை மாற்றிய பிஹார் இளைஞன்

பிஹாரில் திரைப்படத்தில் வருவதுபோல் ஒருவரது நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. ரயிலில் யாசகம் எடுத்துவந்த ஆதரவற்ற பெண்ணை பார்த்த இளைஞர், அதை கடந்துபோகாமல், அந்த பெண்ணின் குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுடன் அந்த பெண்ணை சேர்த்து வைத்துள்ளார். ஆனால், விதி வேறு விளையாட்டை விளையாடியது. இதனால், இருவரிடையேயும் காதல் மலர்ந்து, அது சமீபத்தில் திருமணமாக முடிந்தது. SHARE
News December 11, 2025
‘பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000’

2021-ல் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ₹2,500 வழங்கப்பட்டதாக EPS தெரிவித்தார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், இதுவரை திமுக ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தவில்லை என கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், வரும் தைப்பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 11, 2025
விரைவில் மோடி – இஸ்ரேல் PM சந்திப்பு

PM மோடியை, இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை இருவரும் வன்மையாக கண்டித்து உரையாடினர். காசா அமைதி திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கும், உலகில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என மோடி உறுதியளித்தார். இந்நிலையில், இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்திப்பார்கள் என இஸ்ரேல் PM அலுவலகம் தெரிவித்துள்ளது.


