News November 22, 2024

ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.

Similar News

News December 5, 2025

வேலூர்: ஆன்லைன் மோசடி-ரூ.26 லட்சத்தை பறிகொடுத்த பெண்!

image

வேலூரை சேர்ந்த 35 வயது பெண்ணின் செல்போனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஒரு லிங்க் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய அவர் போலியான பங்கு சந்தை வெப்சைட்டில் 26 லட்சம் செலுத்தி உள்ளார். அவர் செலுத்திய பணத்துக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பெண் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பர்: கனிமொழி

image

மதவாத அரசியலை தமிழகத்தில் செய்துவிட RSS-BJP தொடர்ந்து முயற்சித்து வருவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த முயற்சியை, தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏற்க மறுக்கும் ஆகம விதிகள், கார்த்திகை திருநாள் முடிந்த பின்னும் தீபம் ஏற்ற அனுமதிப்பது தான் வியப்பாகவுள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 5, 2025

25 ஆண்டுகால மோடி, புடின் நட்பு (RARE IMAGE)

image

PM மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் அரசியலையும் கடந்து மிக நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் நட்பு இன்று நேற்று அல்ல 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2001-ல் மாஸ்கோவில் அப்போதைய இந்திய PM வாஜ்பாய் புடினை சந்தித்தார். அவருடன் குஜராத் CM-மாக இருந்த மோடியும் சென்றிருந்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையேயான நட்பு மலர்ந்திருப்பதாக அறியப்படுகிறது.

error: Content is protected !!