News September 26, 2024

சமையல் எண்ணெய் விலை ₹22 வரை உயர்வு

image

சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ₹8 – ₹22 வரை உயர்ந்துள்ளது. சோயாபீன், சூரியகாந்தி, பாமாயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த 13ம் தேதி உயர்த்தியது. இதையடுத்து கடந்த 2 வாரமாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. விலையை அதிகரிக்க வேண்டாமென்ற அரசின் எச்சரிக்கையை ஆயில் நிறுவனங்கள் பொருட்படுத்தவில்லை. பாமாயில் ₹100ல் இருந்து ₹122ஆகவும், கடுகு எண்ணெய் ₹141ல் இருந்து ₹152ஆகவும் உயர்ந்துள்ளது.

Similar News

News August 12, 2025

தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு

image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி பாதுகாப்பு, பணப்பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

News August 12, 2025

வனத்தின் பாதுகாவலன்: உலக யானைகள் தினம்!

image

▶ ஒரு வளர்ந்த யானை ஒரு நாளுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்கிறது.
▶யானைகளின் சாணத்தின் மூலம் 50 வகையான தாவரங்கள் காட்டில் விதைக்கப்படுகின்றன.
▶ யானை குட்டிகள் பிறந்த 2 மணி நேரத்தில் நடக்கத் தொடங்கிவிடும்.
▶ ஆப்பிரிக்காவின் சவன்னா வகை யானைகள் தான் உலகின் பெரிய விலங்கினமாம். இதன் எடை 6000 கிலோ▶ யானைகள் அருமையாக நீந்தும் திறன் கொண்டவை. இவற்றால் தொடர்ந்து 6 மணி நேரம் நீந்த முடியும்.

News August 12, 2025

விஜய் வாய் திறந்துவிட்டாரா? தமிழிசை கிண்டல்

image

எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தமிழிசை, ‘பரவாயில்லையே ஒருவழியாக தம்பி விஜய் வாய் திறந்துவிட்டாரா’ என கிண்டலாக பதிலளித்தார். போராடும் தூய்மைப்பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியிருக்கிறார்; கூட்டம் வரும் கூட்டம் வரும்னு வெளிய வராம இருந்தா அப்புறம் எதுக்கு அவரு அரசியல் கட்சி தலைவர்? முதலில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கட்டும் என்றார்.

error: Content is protected !!